Author: பேரா. உமர் ஃபாரூக்

முஸ்லிம் பெண்கள் தங்கள் பள்ளி சீருடையின் நிறத்தில் கூடுதலாக ஒரு துணியை தலையில் அணிவது பெரும் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியச் சமூகத்தில் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கப்படும் பின்னணியில் மட்டுமே இந்த சர்ச்சையைப் புரிந்து கொள்ள முடியும். ஹிஜாப் தடை தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, சொந்த நாட்டிலேயே இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை கொன்று அடைக்கப்பட்ட சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட கடைசி ஆணியாகும். இனிமேல், ‘உங்கள் நம்பிக்கையை நீங்கள் புரிந்துகொண்டபடி கடைப்பிடிக்க உங்களுக்கு உரிமை இல்லை’ என்று மட்டுமல்ல, ‘உங்கள் சமயத்தின் அடிப்படை கடமைகள் என்ன என்பதை தீர்மானிக்கும் மார்க்க அதிகாரம் உங்களுக்கு இல்லை’ என்றுதான் இந்தத் தீர்ப்பு முஸ்லிம்களைப் பார்த்துக் கூறுகிறது. அதாவது, சில முஸ்லிமல்லாத ‘மௌலவிகள்’ நீதிபதிகளாக வேடமிட்டு உங்கள் நம்பிக்கையின் செயல்பாடுகள் தொடர்பான இறையியல் மற்றும் மார்க்கச் சட்டம் தொடர்பான விஷயத்தை முடிவு செய்யும்போது, ​​நீங்கள் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து…

Read More

கடந்த வாரம் டெல்லி பேராசிரியர் ராகேஷ் குமார் பாண்டே சமூக வலைதளத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் கேரளாவில் இருந்து அதிகளவில் மாணவர்கள் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேருவதாகவும் இதற்கு காரணம் கேரளாவில் கல்லூரி பேராசிரியர்கள் திட்டமிட்டு அதிக மதிப்பெண் வழங்குவதாக அடிப்படை ஆதரமில்லாமல் குற்றச்சாட்டை குறிப்பிட்டு இது கேரளா தொடுக்கும் “Marks Jihad” அதாவது “ மதிப்பெண் ஜிஹாத்” என்ற அபத்தமான சொற்சொடர் பயன்படுதியுள்ளார். இது கேரளாவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இவர் ஆர்‌எஸ்‌எஸ் சார்புடைய பேராசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஆவார். இது போன்ற வன்மம் நிறைந்த ஆசிரியரின் பிடியில் சிக்கும் மாணவர்களின் நிலை ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் முஸ்லிம்களை வன்மத்தோடு வசைபாடும் லவ் ஜிஹாத் தொடங்கி land ஜிஹாத்,யு‌பி‌எஸ்‌சி ஜிஹாத் என்று பல வகையான சொற்கள் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்புரை செய்யப்படுவதை பல இடங்களில் காணமுடிகிறது. இவ்வாறு இஸ்லாம்/முஸ்லிம்கள் மீது வசைசொற்கள் உருவாக்கி…

Read More