உங்கள் அரசியல் வெளிப்பாட்டின், சித்தாந்தப் புரிதலின், தாங்கிப்பிடிக்கும் கருத்தாக்கத்தின் மற்றுமொரு பரிமாணம் தான் ‘உள்ளேன் ஐயா’ என்று நீங்கள் ‘ துக்ளக் 50’ விழாவில் ஆஜரானது. எனது சிறு பருவத்தில் ஆதர்சமாக இருந்த ஒரு நடிகர் என் இளமை முடியும் முன்னே அஸ்தமனத்தை நோக்கி நகர்வதைப் பார்க்கும்போது ஒரு சினிமா ரசிகனாய் மனம் வருத்தம்தான் கொள்கிறது. ‘லிங்கா’வில் தொடங்கி ஒரு தொடர் சரிவை நோக்கித்தான் உங்கள் சினிமா பயணம் இருக்கிறது என்ற பிரக்ஞையற்று இருக்கிறீர்களா, ரஜினி..? இடையில் ‘கபாலி’ உங்களைக் காத்தது. காரணம், ரஜினி என்கிற பிம்பம் அல்ல. அது பேசிய அரசியல். உங்களது மேட்டுக்குடித் தனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு பேசிய விளிம்பு மானிடரின் அரசியல். ஆனால், நிஜத்தில் அதைப் புறந்தள்ளிவிட்டு அதிகாரத்தின் குரலாய் மட்டுமே ஒலிக்கிறீர்கள், ரஜினி. நிதர்சனம் என்னவென்றால் அதிகாரத்தின் குரல்கள் எப்போதும் ஓரிடத்தில் இருந்து மட்டுமே ஒலித்து விடாது. தமிழ் மண்ணும்,தமிழ் ரசிகர்களும் ஒரு ஆன்மீகவாதியாய், இந்து மதப்…
Author: Admin
எவ்வவகைப் போராட்டங்களை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் எழுப்பப்படும் முழக்கங்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. குறியீட்டுரீதியில் மட்டும் இல்லை; மிகவும் பொருண்மையான, பருண்மையான பொருளிலேயே முழக்கங்கள் முக்கியமானவை. போராடுபவர்களின் மன உறுதியை, உலகக் கண்ணோட்டத்தை, போராட்டத்தின் திசைநெறியைச் சுட்டுபவை அவை. இன்குலாப் ஜிந்தாபாத், ஆஸாதி, புரட்சி ஓங்குக, ஜெய் பீம், கம்யூனிசமே வெல்லும், தமிழ் வாழ்க எனப் பலவகைக் கோஷங்கள் முன்பும் இப்போதும் எழுப்பப்படுகின்றன. எதிர்மறையில் ஃபாசிசம் ஒழிக, பார்ப்பனியப் பயங்கரவாதம் ஒழிக, இந்துத்துவம் ஒழிக என்றும் முழக்கங்கள் எழுப்பப்படுவதுண்டு. இவை ஒரு வகை. பிறரை இழிவுசெய்யும், ஆதிக்கம் செய்யும் நோக்கில் எழுப்பப்படும் இரண்டாம் வகைக் கோஷங்களும் உள்ளன. ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணிக் கும்பல்களின் (சொல்ல நாகூசும்) கோஷங்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். இதில் ‘அல்லாஹு அக்பர்!’ என்ற முழக்கம் எவ்வகையில் சேரும்? இதை முழங்கும் முஸ்லிம்கள் பொருள்கொள்வது என்ன? முஸ்லிம் அல்லாதோர் பலருக்கு இதுபற்றி பெரும் மயக்கம் நிலவுகிறது. குறைந்தபட்சமாக, ‘இது ஒரு…
அமெரிக்க-இந்தியர் முஸ்லீம் கவுசின்சில், தன்னார்வ சமுதாய அமைப்பு மற்றும் மனித உரிமை இந்து அமைப்புகள் இணைந்து இந்தியாவில் தற்போதைய நிலையைப் பற்றிய ஆய்வு வெளியீட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அறிஞர்கள், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் உட்படப் பலர் தங்கள் ஆய்வுகளை சமர்ப்பித்தனர். சர்வாதிகாரம், இனப்படுகொலை பற்றிய ஆய்வில் உலகளவில் கவனம் பெற்றவர் டாக்டர். கிரிகோரி. ஹெச். ஸ்டாடண்ட். காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமின் தற்போதைய நிலையைப் பற்றி ஆராய்ந்து அதிகாரிகள் மற்றும் மக்களின் முன் சமர்ப்பித்தார். அதாவது, ‘தற்போது அரசு இனப்படுகொலைகளுக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் மற்றும் அஸ்ஸாமின் இன்றைய நிலையில் தீவிர கண்காணிப்புள்ளக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த நிலை கூட்டுத் தாக்குதல். அதாவது இனப்படுகொலை’ என எச்சரிக்கிறார் ஸ்டாடண்ட். 1996ம் ஆண்டு அமெரிக்க மாகாண துறையில் பணியாற்றிய ஸ்டாடண்ட் இனப்படுகொலைக்கான 10 படிநிலைகளை வரையறுத்தார். முதல்நிலை ‘நீங்கள்/நாங்கள் என வகுப்பு துவேஷம் பேசுவது,’ இரண்டாவது நிலை ‘அவர்கள் வெளிநாட்டவர்கள் என அந்நியமாக்குவது’,…
நான் இங்கு இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். 1) நாம் குடியுரிமையை எப்படிப் புரிந்துகொள்வது? 2) குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றைக் குறித்துப் பேசும்போது எந்த மொழியைக் கையாள்வது..? நவீன தேசிய அரசுகள் தோற்றம் பெற்றபோது தான் குடியுரிமை எனும் கருத்தாக்கம் உருவாகியது என்பதை நாம் அறிவோம். இதனை, “திடீரென தேசிய அரசுகள் உருவெடுத்தன. அதன் விளைவாக, மக்கள் ஏதோ ஒரு தேசத்தின் அல்லது நாட்டின் குடிமக்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். இதற்குப் பிறகு எந்த நாட்டுடனும் அடையாளப்படாதவர்கள் நாடற்றவர்கள் ஆகிவிட்டார்கள்” என ஹன்னா அரென்ட்ட் குறிப்பிடுகிறார். இந்த நாடற்றவர்களின் நிலை என்ன? குடியுரிமை தான் மனிதர்களின் அடையாளம். ஆனால், அது மறுக்கப்பட்டவர்கள் எந்த உரிமையும், அடையாளமும், அடிப்படைகளையும் இழந்த மனிதர்களாகிறார்கள். இவர்களுக்கு வாக்குரிமை, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை என எதுவும் இருக்காது. இவர்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்? இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் கேரளாவிலிருந்து ஒரு சில…
ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க அனுமதி மறுத்தேன்!!ஐ ஐ டி….. இந்தியப் பெற்றோர்களின் பெருங்கனவு!! என் பெரியவனையும் இந்தக் கனவோடுதான் வளர்த்தேன். ஐஐடியில் படிப்பு, அரசு வேலை, இந்தியாவுக்கு சேவை என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தேன். அவனும் அதிலேயே மனம் கொண்டான்.ஆனால், சரியாக அவன் கல்லூரி சேரும் சமயத்தில் இந்தியாவில் பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்தது. வருமுன்பே வெறுப்பை வேரடி வரைப் பரப்பியிருந்தார்கள் என்பதால், மிகுந்த தடுமாற்றம் அவனை இந்தியாவில் சேர்ப்பதா வேண்டாமா என்று. இப்போது ஃபாத்திமாவின் தாயாருக்கு இருக்கும் அதே பயம் எனக்கும் – அன்றும் இன்றும்!! அவனுக்கு ஐஐடி கிடைக்கவில்லை என்பது அப்போது ஏமாற்றமாக இருந்தாலும், பின்னர் நடந்தவற்றால், நல்லவேளை கிடைக்கலை என்றே தோன்றியது. முதுகலை படிக்க ஐஐடி போகலாம் என்று நினைப்பவனை நாங்களே இப்போது வேண்டாமென்கிறோம்!! JEE தேர்வில்,…
Bapsa- Fraternity கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது நடந்த பல்கலைகழக மாணவர் சங்க தேர்தலில் 25% வாக்குகள் பெற்றுள்ளோம். மேலும் Bapsa – Fraternity சார்பாக School of Language துறையில் கவுன்சிலர் பதவிக்கு போட்டுயிட்டு வென்ற மாணவி ஆஃப்ரீண் ஃபாத்திமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.மாணவி ஆஃப்ரீன் ஃபாத்திமா தன்னை இஸ்லாமிய பெண்ணாக முன்னிறுத்தி தேர்தலில் பெற்றிருக்கும் வெற்றி Bapsa Fraternity இயக்கங்களின் மேல் சுமத்தப்பட்ட வெறுப்பு பிரச்சாரத்தை தவடுபொடி ஆக்கியுள்ளது. ஒடுக்கபட்ட மக்கள் தங்களுக்காக முன்னெடுக்கும் அரசியலில் குறிப்பாக இஸ்லாமிய அரசியல் ஆணாதிக்கம் நிறைந்தது, பெண்கள் அடக்குமுறையை போதிக்கக்கூடியது போன்ற தேய்ந்து போன முஸ்லிம் வன்ம கருத்துக்களுக்கு பதிலடியாக அமைந்தது ஆஃப்ரீன் ஃபாத்திமா வின் அபார வெற்றி.JNU பல்கலைகழகத்தில் இஸ்லாமிய பெண்களின் அரசியல் எழுச்சி தவிர்க்க முடியாத யதார்த்தம் ஆகிவிட்டது. தங்களை இஸ்லாமிய பெண்ணாக முன்னிறுத்தி போராட்டங்களில் தலைமை தாங்கும் பல முஸ்லிம் பெண் சிந்தனையாளர்களும்,ஆளுமைகளும்…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், மரவப்பட்டி காலனி, பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவன் சரவணகுமார். இவர் கடந்த 11.10.19 வெள்ளியன்று பள்ளிக்கூடத்தில் சாதியின் பெயரால் சகமாணவனால் வகுப்பறையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. சரவணகுமார் 11.10.2019 அன்று தனது சக பள்ளி தோழன் மோகன் ராஜின் புத்தகப்பையை அதே வகுப்பறையில் பயிலும் மகா ஈஸ்வரன் என்ற மாணவன் ஒளித்துவைத்து அவர்களை தேடவைக்க, அது குறித்து மகா ஈஸ்வரனிடம், மாணவன் சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் விசாரித்திருக்கின்றனர். அப்பொழுது மகா ஈஸ்வரன் மாணவன் சரவணகுமாரை நோக்கி தகாத வார்த்தைகளில் பேசி நீ எல்லாம் என்னை எதிர்த்து பேசுவாயா என்று கூறி தன்னிடமிருந்த பிளேடால் சரவணகுமாரின் முதுகில் கிழித்துள்ளார். அதில் படுகாயமடைந்த மாணவன் சரவணகுமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என பாடம் படிக்கும் பள்ளியில்…
அதீத அக்கறையில்,ஓட்டமும் நடையுமாய்கொழுப்புணவில் கவனமாய்,சத்துணவே கதியென்று,பார்த்துப் பார்த்து,தின்று தீர்த்துஉடல்நலமே முக்கியமாய்நாம்கழிக்கும் வாழ்நாட்கள். என்ன கவனம் வைக்கிறோம்,நம் மனநலத்தில்? அதிகவேலை – பணிச்சுமைகோபம் – தாபம்போட்டி – பொறாமைமன அழுத்தம் – கலக்கம்இரவுப்பணி – ஓய்வின்மைதனிமை – விரக்திமரியாதைக் குறைவுகண்ணியக் குறைவுவயதுமூப்பு – கவனமின்மைமுக்கியத்துவம் இழப்புமதிப்பு இல்லாமை -இவை எல்லாம்யாரும் கவனம் வைக்காதஅன்றாட சுமைகளாய்,தினமொன்றாய் ஒன்று கூடி,மனநலம் கெட்டு,வருங்காலம் பாழ்பட்டு,நம்பிக்கை இழந்து,தூக்கம் கெட்டு,சுயபுத்தி இழந்து,இறுதி முடிவைத்தேடிதற்கொலை நாடிநிமிடத்திற்கு ஒருவர் செல்லும் அவலம்நம் திருநாட்டில். மனநலத்தில் கவனமேஇல்லாத தேசமாய்உருமாறும் நிலை. சகமனிதனை மதிக்காமல்,மனிதநேயத்தை சாகடித்து,தன்சார்பு நியாயத்தைமட்டுமே பார்த்து,சீர்குலையும் மானிடம். உடல் நலத்திற்காக அதிகமாய் மெனக்கெடும் நாம்,என்ன கவனம் வைக்கிறோம்,நம் மனநலத்தில்? நம்மை சுற்றியிருக்கும்மனிதர்களை நினைக்கிறோமா? கவலைக் கொள்கிறோமா? ஆறுதலாய், அன்பாய்சில வார்த்தைகள்தான் பேசுகிறோமா? இன்றே தொடங்குவோம்.முடங்காமல் வெளிக்கிளம்புவோம்.கவலைகளை பகிர்வோம்.பிறர் கவலைகளுக்குகாது கொடுப்போம்.நம் சுமைகளைகொஞ்சம் இறக்கிவைப்போம்.பிறர் சுமைகளைகுறைக்க பாடுபடுவோம் மனநலமும், உடல்நலமும்நம் இரு கண்கள். – ஜ. ஜாஹிர் உசேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் தத்துவப்பாடம் என்கிற பெயரில் பகவத் கீதை மற்றும் சில உபநிடதங்கள் மாணவர்களுக்கு பாடங்களாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயலை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) வன்மையாக கண்டிக்கிறது. தொழில்நுட்ப பாடத்தில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த கருத்துக்களை புகுத்துவது என்பதை மத்திய பார்ப்பனிய பா.ஜ.க அரசின் ஒரே மொழி,ஒரே மதம்,ஒரே கலாச்சாரம் என்கிற கொள்கையை திணிக்கும் முயற்சியாகவே எஸ்.ஐ.ஒ பார்க்கிறது.கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் மாணவர்கள் பொறியாளர்களாக உருவாகின்றனர். தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்களும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணத்தில் 20% சலுகை போன்ற உதவிகளை செய்து மாணவர்களை பொறியியல் கற்க ஊக்குவித்தனர்.அதன் விளைவாக ஏராளமான பொறியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களிலிருந்தும் உருவாகி இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தங்களின் திறமையின் மூலம் பணிக்கு சேர்ந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது பொறியியல் பாடத்திட்டத்தில்…
எதிர்கொள்வது பொருளாதாரச் சுணக்கம் அல்ல சிக்கல்! நிதியமைச்சரின் அறிவிப்புகள் தேற்றுமா? பதில் கிட்டாத சில கேள்விகள். இந்தியாவின் பெருளாதாரம் சந்தித்து வரும் சரிவை தடுத்து நிறுத்தவும் மீண்டும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் 10 முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குத் தேவையான அளவிற்கு கடன் வசதியை அளிக்கத் தேவைப்படும் முதலீட்டுச் செலுத்தலுக்கு நிதி நிலை அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட ரூ.70,000 கோடியை பொதுத் துறை வங்கிகளுக்கு உடனடியாக வழங்கப்படும், கட்டுமானத் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை நீக்க வீட்டு வசதிக் கடன் தரும் நிதியமைப்புக்களுக்கு மேலும் ரூ.30,000 கோடி அளிக்கப்படும், சிறு குறு நடுத்தரத் தொழிலகங்கள் செலுத்திய ஜிஎஸ்டியில் திரும்ப அளிக்க வேண்டிய தொகையை 30 நாட்களுக்குள் செலுத்தப்படும் என்பன நிதியமைச்சரின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய, அவசியமான நடவடிக்கைகள் ஆகும். வாகன உற்பத்தியிலும் விற்பனையிலும் உருவாகியுள்ள தேக்க நிலையை நீக்கிட உதவிடும் வகையில்…