கொரோனா தொற்றுக் கால விடுதிக்கட்டண நீக்கம் வேண்டி, தங்களுடையத் தேவைகளுக்காகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தனிப்பட்ட காழ்புணர்ச்சியால் அவர்களின் தேர்வு மதிப்பெண்ணில் பாரபட்சமாக நடந்துகொண்டதோடு, விளக்கம் கேட்கச் சென்ற மாணவர்களிடம் தரக்குறைவாகப் பேசியும், கல்லூரி மாணவியைப் பாலியல் ரீதியாக தாக்கிய சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத் தலைவர் திரு. சௌந்தரராஜன் மீது பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். பேராசிரியரின் தவறான நடவடிக்கையைக் கண்டித்து 4 நாட்களாக துறை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் 21/03/2021 பேராசிரியரால் தாக்கப்பட்ட மாணவி மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்ற செய்தி அதிர்ச்சியை அளித்தது. செய்தி அறிந்தவுடன் SIO—வின் மாநில நிர்வாகிகள் கல்லூரி மாணவர்களையும், பாதிக்கப்பட்ட மாணவியையும் மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து பேசினார்கள். அதனடிப்படையில் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதங்களுக்கு சரியான நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர் போராட்டத்திற்கு SIO முழு ஆதரவையும் கொடுக்கும்.. இவ்விவகாரத்தில்,…
Author: Admin
புதுதில்லி: பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படவரிடமே ‘அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளமுடியுமா’ என்று கேட்டதற்காக இந்திய தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே தன்னுடைய பதவியிலிருந்து விலக வேண்டும் என நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு குழுக்கள், அக்கறையுள்ள குடிமக்கள் அடங்கிய குழு வெளிப்படையான பகிரங்கக் கடிதம் ஒன்றை தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளது. அந்த பகிரங்கக் கடிதத்தில் ஆனி ராஜா, மரியம் தாவ்லே, கவிதா கிருஷ்ணன், கம்லா பாசின், மீரா சங்கமித்ரா, அருந்ததி துரு போன்றபிரபலமான பெண்கள் உரிமை ஆர்வலர்களும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் சங்கம், இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு, சஹேலி, பாலியல் வன்முறை மற்றும் அரசு அடக்குமுறைக்கு எதிரான பெண்கள், திட்ஸ் (THITS), பெண்கள் அடக்குமுறைக்கு எதிரான மன்றம், பெபாக் கலெக்டிவ், பாரதிய முஸ்லீம் மஹிளா அந்தோலன், தலித் விமென்ஸ் ஃபைட், பசோ (BASO), பெண்கள் மற்றும்…
கலையின் தோற்றம் மக்களின் கூட்டுப் பங்களிப்பால் உருவம் பெற்றது. அது அவர்களின் வாழ்வின் ஓர் அங்கமாக மாறியது. மனிதனின் அறிதல் திறனின் வளர்ச்சி அறிவியலானது போல், உணர்ச்சித் திறனின் வளர்ச்சி கலையாகியது. ஆதலால், இரண்டும் அதனளவில் மக்களுக்காகச் செயல்படுவதே அடிப்படை இயக்கம். இன்று, சில முற்போக்கு இயக்குநர்கள் அல்லது எழுத்தாளர்களே, ‘என் படைப்பைக் குறிப்பிட்டவர்களுக்குத்தான் எடுத்தேன். அவர்களிடம் அது சென்றடைந்தால் போதுமானது. அந்த சிலர் அதனை அறிந்து என்னைப் பாராட்டினாலே எனக்கு போதும்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். தமிழில் மிஷ்கின் முதல் விசாரணை பட வேளையில் வெற்றிமாறன் வரை இதைச் சொல்லியிருக்கிறார்கள். அறிவியலை எப்படி அனைவருக்குமானதாக விளிம்புநிலை மக்கள் வரை கொண்டு சேர்ப்பது அவசியமோ, அந்தளவிற்குக் கலையையும் சேர்ப்பது தேவை. மக்களிடமிருந்து உருவாகிய கலை அதைத் தவறும்பட்சத்தில் தனது உள்ளார்ந்த அர்த்தத்தை இழக்கிறது. அதனை உருவாக்கியவனும் கலைஞன் என்ற சமூகப் பொறுப்பிலிருந்து விலகிக் குறிப்பிட்ட வணிக தேவையை நிறைவு செய்பவனாகிறான். எஸ்.பி.…
இந்தியாவில் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூடான விஷயம். ஆண்டாண்டு காலமாக எல்லாவற்றையும் அடக்கி ஆண்டு கொண்டிருந்தவர்களின் பயணத்தில் தடைக்கல்லாகவும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் படிக்கல்லாகவும் மாறிய ஒன்று. எப்படியாவது இந்த இடஒதிக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் சில கும்பல்கள் ஓயாது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது உச்சநீதிமன்றத்தில் இட ஒதிக்கீடு 50% மிகாமல் இருக்க வேண்டும் என்பதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் இட ஒதிக்கீட்டைக் குறித்த தெளிவான புரிதல் இல்லாமலும் அதை பாதுகாக்க வேண்டிய தேவையை உணராமலும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இடஒதுக்கீடு சாதிய, சமூக பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டது பொருளாதார மற்றும் கல்வி அடிப்படையில் அல்ல. பல நூற்றாண்டுகளாக சாதிய, சமூக பாகுபாடுகளால் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் தேசிய வளங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தங்களின் சரியான பங்கைப் பெற முடியாத நிலைமைதான் இருந்தது. சமூக, அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வியில் உரிய உரிமைகள்…
இந்து தேசியவாதம் பொதுவாக ஒரு பிராந்திய-மதவாத இயக்கமாக வரையறுக்கப்படுகிறது. ஆனால், அவை சமூக காரணிகளுடன் இணைந்த அடையாள அரசியலை முன்னெடுக்கலாம். போலவே, அவர்கள் வளர்ச்சியின் இறுதிக்கட்டமாக மண்டலுக்கு முதன்மையாக எதிர்வினையாற்றியதாக இருந்துள்ளது. அப்போதைய பிரதமர் விபி சிங் மண்டல் அறிக்கையைச் செயல்படுத்துவோம் என்று அறிவிக்கையில், ‘எதிர்பார்த்தபடி சூத்திரர்களின் புரட்சியால் அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் தேசத்திற்கான நீதி மற்றும் ஆன்மீகப் படையை உடனடியாக நிர்மாணிக்க வேண்டிய தேவை உள்ளது’ என்று எழுதியது ஆர்எஸ்எஸ் இதழான ஆர்கனைசர். மண்டல் இரண்டாம் கட்டமாக நிறைவேறயில், ‘காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணி மத்தியில் தகுதிக்கான மெரிட் அரணையே தகர்க்கிறது’ என்று கூறியது அதே இதழ். 2004 மற்றும் 2009ல் பாஜக தொடர்ந்து தோல்வியுற்ற பிறகு, அதிகாரத்திற்கு வர மற்றும் இந்து தேசியவாத கொள்கை மற்றும் அதன் நலனிற்கும் எதிராக உள்ள செயல்பாடுகளைத் தடுக்க உடனடி திட்டங்களை வகுக்க வேண்டியிருந்தது. தேசியவாத பாப்புலிச பிராண்டை நரேந்திர மோடி…
மாலிக்பத்ரி, இவர் பிராய்ட் மற்றும் ஸ்கின்னர் போன்ற உளவியாளர்களின் கோட்பாடுகளை விமர்சித்தல் மற்றும் அதனை மதிப்பிடும் சவாலை ஏற்றுக்கொண்டு,, அவற்றை மதிப்பீடுசெய்து இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அவர்களுடன் ஈடுபடுவதற்கான ஒரு சீரான வழியை வழங்கினார் அறிவு மற்றும் அறிவு உருவாக்கம் ஆகியவற்றின் இஸ்லாமிய மயமாக்கல் இயக்கத்தில் ஒரு உயர்ந்த நபரின் மறைவைக் கேட்பது மிகவும் மனதை கலக்கமடையச் செய்கிறது, உளவியல் துறையில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஒரு மிகப்பெரிய ஆளுமை பேராசிரியர் மாலிக்பத்ரி. இவர் ஒரு புகழ்பெற்ற உளவியலாளர் ஆவார். இவர் பல உளவியலாளர்களை குறிப்பாக முஸ்லீம் உளவியலாளர்களுக்கு அறிவூட்டியுள்ளார். நவீன உளவியல் பிராய்ட் மற்றும் ஸ்கின்னரின் கோட்பாடுகளை கண்மூடித்தனமாகப் பின் பற்றியபோது, முஸ்லீம் உளவியலாளரும் இதற்கு விதிவிலக்கல்ல, இதற்கு இவர் ஆதிக்கம் செலுத்தும் போக்குகளை விமர்சிக்கவும், அவற்றை மதிப்பீடு செய்யவும், ஈடுபாடு மற்றும் பணிநீக்கம் செய்வதற்கான சமநிலை வழியை வழங்கும் முயற்சிகளை தன் கடமையாக ஏற்றுக்கொண்டார். இஸ்லாமிய உலவியலின் கவனத்தை ஈர்த்து, ஆரம்ப…
அந்தக் காலையும் விடிந்தது(!) 38 வருடங்களுக்கு முன் பிப்.18, 1983ம் ஆண்டு மத்திய அஸ்ஸாமின் நெல்லி உட்பட்ட பகுதிகளில் ஆறு மணிநேர இடைவெளியில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை 2191 முஸ்லிம்களின் உயிரைப் பறித்தது (கணக்கில் வராதவர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் இருக்கலாம்). அலிசிங்கா, குலாபதார், பசுந்தரி, பகுபா பீல், புக்துபா ஹபி, பர்ஜோலா, புதினி, தங்காபோரி, இந்துர்மாரி, மாட்டி பார்பத், முலாதாரி, சில்பேட்டா, போர்புரி மற்றும் நெல்லி என நாகயோன் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பகுதிகளில் சிலமணி நேரங்களுக்குள் மிருகத்தனமான வன்முறை நிகழ்த்தப்பட்டது. பயங்கரமான ஆயுதங்களுடன் அதிகளவில் மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வாக இது இருக்கும். ‘அஸ்ஸாமிய அனைத்து மாணவர் அமைப்பு'(AASU) இந்த படுகொலையில் முக்கிய பங்காற்றிருக்கும் என்று நம்பப்படுகிறது. நெல்லி படுகொலையில் ஆர்எஸ்எஸ் சக்திகளின் தொடர்பை மறுக்க முடியாது. அதேநேரத்தில் அஸ்ஸாமிய இயக்க கிளர்ச்சியாளர்கள் ஆர்எஸ்எஸ்-வுடன் இணக்கமான உறவைத் தொடர்ந்தனர். படுகொலை தொடர்பாக மொத்தம் 688 வழக்குகள் பதிவு…
பெங்களூரைச் சேர்ந்த 21 வயது பெண்ணான திஷா ரவி பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இளம்வயது சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு பிரச்சார ஆவணத்தினை ஃபிப்ரவரி 4-ம் தேதி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். விவசாயிகளுக்கு ஆதரவான அந்த பிரச்சார ஆவணத்தினை பகிர்ந்ததற்காக கிரேட்டா துன்பர்க் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த ஆவணத்தினை தயாரித்ததில் திஷா ரவிக்கும் பங்கு இருப்பதாக குறிப்பிட்டு திஷா ரவியை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. யார் திஷா ரவி? 2018-ம் ஆண்டு சுவீடனைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியான கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காப்பதற்காக அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை வைத்து சுவீடன் பாராளுமன்றத்தின் முன்பு தனது போராட்டத்தைத் துவங்கினார். Fridays For Future என்று அந்த போராட்டத்திற்கு பெயரிடப்பட்டது. பருவநிலை மாற்றத்தினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் தலைவர்களுக்கு கோரிக்கை வைத்து, வெள்ளிக்கிழமை தோறும்…
நான் கடந்த 20 ஆண்டுகளாகக் கர்நாடகா மாநில விவசாயிகள் இயக்கத்தில் (Karnataka Rajya Raitha Sangha-KRRS) செயல்பட்டு வருகிறேன். அதில், குறிப்பிட்ட நினைவுகளில் ஒன்றாகப் பார்ப்பனிய சைவ உணவு சுத்தத்தை மறுக்கும் விதமாகக் கர்நாடக சட்டப்பேரவை முன் கேஆர்ஆர்எஸ் நடத்திய மாட்டுக்கறி விருந்து நினைவிருக்கிறது. மேலும், பார்ப்பனியத்திலிருந்து சாதியற்ற சமூகத்தை மீட்டுருவாக்க கிராமங்களில் சாதி மதங்களைக் கடந்து கேஆர்ஆர்எஸ் நடத்திவைத்த சுயமரியாதை திருமணங்கள் முக்கியமானவை. ‘கர்நாடகா பசுவதை தடை மற்றும் கால்நடைகள் பாதுகாப்புச் சட்டம்’ என்ற பெயரில் ஜனநாயகமற்ற பார்ப்பனிய சட்டத்தைச் சமீபத்தில் கொண்டுவந்துள்ளது பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி. இச்சட்டம் 2020ல் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்த நிலையில், கவர்னரின் ஒப்புதலுடன் அவசரச் சட்டமாக நிறைவேற்றியுள்ளனர். கர்நாடகாவில் இன்று அவசரமாக இந்த சட்டத்தை நிறைவேற்றக் காரணம், ஆளும் பாஜக அரசின் மத்தியத் தலைவர்களின் கவனிப்பைப் பெறுவதாகவே இருக்கும். இந்த சட்டம் ஒன்றும் புதிதல்ல. தற்போதைய முதலமைச்சர் எடியூரப்பாவால்…
என்னை வெறும் முஸ்லீம் இளைஞனாகக் கேட்கட்டும்; எல்கர் பரிஷத்தில் ஷர்ஜீல் உஸ்மானியின் முழு உரை ஷர்ஜீல் உஸ்மானி மேடையில் அமர்ந்திருக்கும் மரியாதைக்குரிய பிரமுகர்களே, அன்புள்ள நண்பர்களே, பெரியவர்களே, எனது பெயர், எனது குடியுரிமை, எனது நேர்மை, எனது நன்மை, எனது குறைபாடுகள் ஆகியவற்றிலிருந்து என்னைப் பிரித்து, வெறும் முஸ்லீம் இளைஞர்களாக என்னைக் நீங்கள் பார்க்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் மனதார கேட்டுக்கொள்கிறேன். ஒரு முஸ்லீம் இளைஞனாக, நான் இங்கே என் வலியை வெளிப்படுத்தவும், என் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் கதையைச் சொல்லவும், என் கோபத்தின் செய்தியை அனுப்பவும், என் போரை அறிவிக்கவும் இங்கு வந்துள்ளேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் மரியாதையுடன் வாழ்த்துகிறேன் அஸ்ஸலாமு அலைகும் வா ரஹ்மத்துல்லா ஹாய் வா பராகதுஹு – (என் இறைவனின் சாந்தியும்சமாதானமும் உங்கள் மீது இருக்கட்டும்) இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு ஹர்ஷாலி ஜி என்னை அழைத்தபோது, நான் கவலைப்பட்டேன், எனக்கு ஒரு பயம் இருந்தது,…